Tuesday, February 27, 2007

அம்பி

அம்பி என அழைக்கப்படும் இராமலிங்கம் அம்பிகைபாகர் ஒரு கவிஞர். ஈழத்து எழுதாளர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர். பல ஆண்டுகள் பப்புவா நியூ கினியில் பணியாற்றி விட்டு, தற்சமயம் சிட்னியில் வசிக்கிறார். சிறுவர் இலக்கியத்திற்கு, குறிப்பாக புலம்பெயர் நாடுகளில் தமிழ்ச் சிறார்களுக்காக கவிதைகளை எழுதி வருகிறார்.

இவர் அவுஸ்திரேலியாவில் தமிழ்ப்பாட நூல் ஆலோசகராகவும் பணியாற்றியவர். மருத்துவத் தமிழ் முன்னோடி டாக்டர் சாமுவேல் ஃபிஸ்க் கிறீன் அவர்களுக்கு இலங்கை அரசு முத்திரை வெளியிடுவதற்கு ஆக்கபூர்வமாக உழைத்தவர். டாக்டர் கிறீன் பற்றி ஆய்வுகள் செய்து பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.

இவர் பெற்ற விருதுகள்
*கவிதைக்காக (கொஞ்சும் தமிழ்) இலங்கை அரசின் சாகித்திய விருது.
*கவிதைக்காக உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் தங்கப் பதக்கம்.

இவரது படைப்புக்கள்
*கிறீனின் அடிச்சுவடு (யாழ்ப்பாணம், 1967)
*அம்பி பாடல் (சிறுவர் பாடல்கள், சுண்ணாகம், 1969)
*வேதாளம் சொன்ன கதை (மேடை நாடகம், கொழும்பு, 1970)
*கொஞ்சும் தமிழ் (சிறுவர் பாடல்கள், கொழும்பு, 1992)
*அந்தச் சிரிப்பு
*யாதும் ஊரே; ஒரு யாத்திரை
*அம்பி கவிதைகள் (சென்னை, 1994)
*மருத்துவத் தமிழ் முன்னோடி (சென்னை, 1995)
*Ambi's Lingering Memories (Poetry, பப்புவா நியூ கினி, 1993, 1996)
*Scientific Tamil Pioneer Dr Samuel Fisk Green (கொழும்பு, 1998)
*உலகளாவிய தமிழர் 1999
*A String of Pearls
*பாலர் பைந்தமிழ்

Monday, February 19, 2007

நல்லைக்குமரன் (கந்தையா குமாரசாமி)

அவுஸ்திரேலியா குவின்ஸ்லாந்து மாநிலத்தில் EDITOR´S CHOICE AWARD பெற்ற கவிஞர்.

இலங்கை நிலவரவுத் திணைக்களத்தில் பட வரைஞராகப்(1956-1982) பணியாற்றியவர். தற்சமயம் அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

தமிழிலும் ஆங்கிலத்திலும், கவிதைகள், சிறுகதைகள், உருவகக் கதைகள் எழுதுபவர். அவுஸ்திரேலியத் தமிழர்களின் சிறுகதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர். இலங்கையின் பிரபல பத்திரிகைகள் உட்பட மல்லிகையிலும் இவரது படைப்புக்கள் பிரசுரமாகியுள்ளன. அவுஸ்திரேலியாவிலும் உதயம், கலப்பை, கனடா உலகத் தமிழோசை போன்ற பத்திரிகைகளுக்கும், இதழ்களுக்கும எழுதிக் கொண்டிருக்கிறார்.