Wednesday, September 13, 2006

தாமரைச்செல்வி

ஈழத்தின் பெண் எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவர் தாமரைச்செல்வி. 1973 முதல் சிறுகதைகளையும் நாவல்களையும் எழுதிவரும் தாமரைச்செல்வி இதுவரை ஒன்பது நூல்களை வெளியிட்டுள்ளார். இவருக்கு தேசிய சாகித்திய விருது கிடைத்துள்ளது.

வன்னியில் வசித்து வரும் இவர் சுமைகள், தாகம் , வீதியெல்லாம் தோரணங்கள் மற்றும் பச்சை வயல் கனவு போன்ற நாவல்களை எழுதினார். அத்துடன் மழைக்கால இரவு, அழுவதற்கு நேரமில்லை, வன்னியாச்சி போன்ற சிறுகதைத் தொகுதிகளையும் எழுதினார்,

போரினால் மக்கள் பட்ட துன்ப துயரங்களை, வேதனைகளை, கருத்துருவாக்கி மக்கள் படும் அவலங்களை வெளி உலகுக்கு அவரது எழுத்துக்கள் மூலம் எடுத்துக் கூறினார். அந்த வகையில் “அழுவதற்கு நேரமில்லை” என்ற இரண்டாவது சிறுகதைத் தொகுதியில் முற்று முழுதாக 1995இன் பாரிய இடப்பெயர்வின் அவலங்களையே சித்தரித்தார். வடபுலப்பெயர்ச்சி, வன்னிக்கான யாழ்ப்பாணப் புலப்பெயர்வு மிகப்பெரிய தாக்கத்தை ஈழத்தவரின் மத்தியில் ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்தும் அகதிப் பிரச்சினை அங்கு மோசமடைந்து மிக உக்கிரமான நிலையை தாயகத்தில் கண்டிருந்தது. இந்த நிலைமையைச் சுட்டிக் காட்டும் வகையில் இதிலுள்ள அனைத்துக் கதைகளும் அமைந்துள்ளமை குறிப்பிடத் தக்கது.

இவருடைய படைப்புக்கள்


நிமிர்ந்து எழுந்ததும் சரிந்து வீழ்ந்ததும் மீண்டும் எழ முயற்சிப்பதுமான வாழ்வு எங்களுக்கானது. எங்களின் வாழ்வுதான் இந்நாவலில் விரிந்து கிடக்கிறது

நாவல்கள்
சுமைகள்
தாகம்
வீதியெல்லாம் தோரணங்கள்
பச்சை வயல் கனவு

சிறுகதைத் தொகுதிகள்
மழைக்கால இரவு
அழுவதற்கு நேரமில்லை
வன்னியாச்சி (2005)


கட்டுரைகள்
பெண்ணின் கலாசாரம்

வ.அ. இராசரத்தினம்

வ. அ. என அறியப்படும் வ. அ. இராசரத்தினம் புகழ் பெற்ற ஈழத்து சிறுகதை எழுத்தாளர். நாவல் எழுத்தாளர். ஈழத்தின் மூத்த எழுத்தாளர்.

1940கள் முதல் எழுதி வரும் இராசரத்தினம் பலநூறு கதைகள் படைத்திருக்கிறார். அவருடைய முதல் கதைத் தொகுதியின் மகுடக்கதையான 'தோணி'யே மிகுந்த கவனிப்பையும் பரவலான வரவேற்பையும் பெற்றது. அநேக தொகுப்புகளில் அது இடம்பெற்றிருக்கிறது.

அவருடைய ஆரம்பக் கதைகளுள் ஒன்றான 'தோணி'யிலேயே அவரது எழுத்தாற்றலும், வாழ்க்கை பற்றிய கண்ணோட்டமும் யதார்த்த நோக்கும், முற்போக்குச் சிந்தனையும் மனித நேயமும், நம்பிக்கை மனோபாவமும் புலனாயின.

கடலில் சென்று மீன் பிடித்து வாழ்க்கை நடத்தும் மீனவன் நித்திய வறுமையிலேயே வாழ வேண்டியிருக்கிறது. காரணம், தோணி அவனுக்கு சொந்தமில்லை. இளைய மீனவன் ஒருவன், சொந்தத் தோணிக்காக ஆசைப்படுகிறான். சொந்தமாகத் தோணி வந்த பிறகே கல்யாணம் செய்து கொள்வது என்று உறுதிபூணுகிறான். அவன் ஆசை நிறைவேறுவதாயில்லை. 'உலகில் உழைப்பவனுக்கு எதுவும் சொந்தமில்லை' என்பதை உணர்கிற அவன், தான் காதலித்த பெண் சுகமாக வாழட்டும் என்ற உயர்ந்த நோக்குடன் சொந்தத் தோணி உடைய ஒருவனுக்கு அவளை மணம் முடித்து வைக்கிறான்.

'இன்னமும் தோணி எனக்குக் கனவுப் பொருளாகத்தான் இருக்கின்றது. அதனாலென்ன? உயர்ந்த கனவு செயல்மிக்க நனவின் ஆரம்பம்தான். எப்போதாவது ஒரு நாளைக்குக் காலம் மாறத்தான் போகிறது. அன்றைக்கு எனக்கு மட்டுமல்ல. என் நண்பர்கள் எல்லோருக்குமே சொந்தத் தோணி இருக்கும். எங்கள் தோணிகள் சப்த சமுத்திரங்களிலும் சுதந்திரமாகச் சென்று மீன் பிடிக்கும். அந்த மீன்களை சந்தையில் பகிரங்கமாக விற்போம். விற்ற பணத்திற்குச் சந்தையில் அரிசி வாங்குவோம். அரிசி வாங்கும் பணம் என்னைப் போன்ற உழைப்பாளியான ஒருவனுக்கு நேரடியாகக் கிடைக்கும். அப்போது உழவனுக்கு நிலமும் சொந்தமாக இருக்கும் அல்லவா?' இதுவே அந்த மீனவனின் எண்ண ஓட்டமாக இருக்கிறது.

கலை அழகுடன் யதார்த்த வாழ்வை சித்திரிக்கும் நல்ல கதை 'தோணி'. இப்படிப்பட்ட வாழ்க்கைச் சித்திரங்கள் பலவற்றை நயமான கதைகளாக உருவாக்கியிருக்கிறார் இராசரத்தினம்.

இராசரத்தினம் ஆசியராகப் பணிபுரிந்து அனுபவங்கள் பெற்றவர். அதனால் பலவித இயல்புகளும் நோக்கும் போக்கும் உடைய ஆசிரியர்களை கதை மாந்தராக்க் கொண்டு பெரும்பாலான கதைகளை எழுதியிருக்கிறார். ஆசிரியர்களது பிரச்சினைகள், வாழ்க்கைச் சிக்கல்கள், குழப்பங்கள், நம்பிக்கைகள், நிலைமைகள் முதலிய பல விஷயங்களை இக்கதைகள் விவரிக்கின்றன.

வேதக் கோயில் மணி, வருடப்பிறப்பு, வருடப் பிறப்பை ஒட்டிக் கொண்டாடப்படுகிற சில நிகழ்ச்சிகள் முதலியன சில கதைகளில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இவற்றில் 'கோயில் மணி ஓசை' 'நத்தார் ஓலம்' ஆகியவை விசேஷமாகக் குறிப்பிடப்பட வேண்டியவை.

தனது மனைவி இறந்ததும் அவர் அனுபவித்த உணர்வுகளையும், அவரது மனநிலையையும் உணர்ச்சிகரமான சொற்சித்திரமாக இராசரத்தினம் எழுதியிருக்கிறார். அதுதான் 'ஒரு காவியம் நிறைவு பெறுகிறது.' சுய சோக அனுபவங்களை உருக்கமாக எடுத்துக் கூறும் இக்கதை வாசகரின் உள்ளத்தைத் தொடும் விதத்தில் அமைந்துள்ளது.


பிறப்பு - 5-6-1925 மூதூர், திருக்கோணமலை.
தாய் - அந்தோனியா
தந்தை - வஸ்தியாம்பிள்ளை
கல்வி -
தாமரைவில் றோமன் கத்தோலிக்க பாடசாலை.
மூதூர் புனித அந்தோனியார் பாடசாலை.
ஆசிரியர் பயிற்சி - மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை.
பணி - ஆசிரியர்
எழுதத் தொடங்கியது - 1946
திருமணம் - 1952 துணைவி - மேரி லில்லி திரேசா
புனைபெயர்கள் -
ஈழநாகன்
கீழக்கரை தேவநேயப் பாவாணர்
வியாகேச தேசிகர்.
[தொகு]
இவரது நூல்கள்

துறைக்காரன் (நாவல்)
கொழுகொம்பு (நாவல்)
கிரௌஞ்சப் பறவைகள் (நாவல்)
ஒரு காவியம் நிறைவு பெறுகிறது (சிறுகதைத் தொகுதி)
ஒரு வெண்மணற் கிராமம் காத்துக் கொண்டிருக்கின்றது (நாவல்)
தோணி (சிறுகதைத் தொகுதி)
பூவரசம் பூ (மொழிபெயர்ப்புக் கவிதை)
மூதூர் புனித அந்தோனியார் கோயிலின் பூர்வீக வரலாறு (சரித்திரம்)
இலக்கிய நினைவுகள் (நினைவுக் கட்டுரைகள்), 1995


வ.அ.இராசரத்தினம்
திரிகூடம்
மூதூர்



ஒரு காவியம் நிறைவுபெறுகின்றது

1. அறுவடை 25
2. பங்கம் 31
3. கோயில் மணி ஓசை 33
4. தோணி 48
5. வென்றிலன் என்ற போதும் 62
6. தோழருக்குத் தெரியாதது 68
7. தலாக் 76
8. அபேதவாதி 84
9. கடலின் அக்கரை போனோரே 92
10. 1+1=1; 1-1=2 100
11. அவசரம் 112
12. நத்தார் ஓலம் 120
13. ஆண்மகள் 127
14. ஓரு தெய்வம் ஆசி வழங்குகிறது 142
15. இரசிகன் 155
16. கலைஞன் துயர் 163
17. தவம் 169
18. உண்ணி 175
19. பிரிபுபசாரம் 178
20. ஒரு பூனைக்கதை 186
21. ஜ“ப்புகள் ஓடிக் கொண்டிருக்கின்றன 188
22. ஒரு காவியம் நிறைவு பெறுகிறது 194
23. சுமை 236
24. பொய் முகங்கள் 246
25. சரிவு 254
26. தர்மம் 261
27. குதிரை 265
28. போர்ப்பறை 272
29. மதிப்பு 280
30. காந்தரி 283
31. பாசம் 288
32. வலை 296
33. வேர்கள் 302
34. மீண்டும் காந்தி பிறப்பார் 310
35. குழப்பம் 320
36. குடிமகன் 328
37. a+a=2a ஆயின்
கதை+கதை= இரண்டு கதைகடல்ல 336
38. மறைப்பு 349
39. தகரவிளக்கு 356
40. பாலை 362
41. தையலக்கா 385
42. வாழ்க சுதந்திரம் 393
43. பிரிவு 395
44. பெண் 404
45. பிறந்த மண் 407
47. ஈட்டிக்காரன் 418
46. பெண்ணியம் 424
48. ஓர் ஆலமரத்தின் கதை 428
49. மனிதன் 439
50 கனி 446

Sunday, September 03, 2006

ஆழியாள்

ஆழியாள் என்ற புனைபெயரில் எழுதும் மதுபாஷினி ஈழத்தின் குறிப்பிடத்தக்க பெண் கவிஞர்களில் ஒருவர்.

இவர் 1968ம் ஆண்டு ஈழத்தில், திருக்கோணமலை மாவட்டத்தில் பிறந்தார். அங்கேயே புனித சவேரியார் வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியைக் கற்று மதுரை மீனாட்சி கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் பட்டப்படிப்பையும், அவுஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முதுமாணிப் பட்டப் படிப்பையும் பெற்றவர். யாழ் பல்கலைக்கழகததின் வவுனியா வளாகத்தில் ஆங்கில விரிவுரையாளராக ஐந்து வருடங்கள் பணிபுரிந்து தற்போது அவுஸ்திரேலியாவில் வசித்து வருகிறார்.

தொண்ணூறுகளில் எழுதத்தொடங்கிய ஆழியாளின் இரு கவிதைத் தொகுப்புக்கள் இதுவரை வெளிவந்துள்ளன. மொழிபெயர்ப்பு, படைப்பிலக்கியம், விமரிசனம் ஆகியவற்றில் தீவிரமாக ஈடுபடுபவர். இவரது படைப்புகள் மூன்றாவது மனிதன், கணையாழி, சரிநிகர், ஆறாம்திணை, தோழி, உயிர்நிழல், அம்மா, பெண் ஆகிய இலக்கியச் சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளன. இவரது கவிதைகள் மலையாளத்திலும், கன்னடத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

இவரது நூல்கள்
உரத்துப்பேச
துவிதம்